Friday, November 19, 2010

Thuravu

மாபெரும் துறவி
அழகிய வன பகுதி. தெய்வீகமான ஆசரம குடில் முன்பு ஓர் அரச மரம்.

அதன் கீழ் தனது சிஷ்யர்களுடன் அமர்த்திருந்தார் வேத வியாசர்.
துறவறம் முலம் மக்கள் சேவை செய்ய சன்யாச தர்மத்தை விளக்கும் குருகுலம் அது.

வியாசர் தனது சிஷ்யர்களுக்கு துறவறம் பற்றி போதித்து கொண்டிருந்தார். எத்தனயோ விளக்கம் கொடுத்ததும் மாணவர்களுக்கு துறவறம் பற்றி விளங்க வில்லை.

ஆசிரமம் ஒட்டிய சாலையில்.... சிறிது தூரத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நடந்து சென்றார்கள்.அந்த ஆடவனின் வலது கையில் மது கிண்ணம் ,மறு புறம் பெண்ணின் தோள்பட்டையில் கைகளை போட்டிருந்தான். மது - மாது சகிதம் தள்ளாட்டத்துடன் வரும் அவனை கண்டார் வியாசர்.

பூமாலையுடன் அவர்களை நோக்கி சென்றார். இருவருக்கும் மாலை அணிவித்து, மூன்றுமுறை அவர்களை வலம் வந்து , அவர்கள் கால்களில் விழுந்து வணங்கினார்.

சிஷ்யர்களுக்கோ பெரும் அவமானமாக போய்விட்டது. வேத வியாசர் மாபெரும் மஹான் என எண்ணி இருந்தோம் , ரிஷியானவர் ஒரு கிழ்நிலை மனிதனை வணங்கி வழிபடுகிறரே என குழம்பினார்கள்.

சிஷ்யர்களின் குழப்பதை உணர்ந்த வியாசர் ," எனதருமை சிஷ்யர்களே , நாம் எல்லாம் சிற்றின்பத்தை துறந்து பேரின்பத்தை அடைய முயல்கிறோம், ஆனால் பேரின்பம் எப்படி பட்டதாக இருந்தாலும் தேவையில்லை என துறந்து சிற்றின்பத்தில் திளைக்கும் இவர்கள் தான் பெரும் துறவியாக எனக்கு தெரிகிறார்கள். பேரின்பத்தையே துறந்த இவர்கள் தான் சிறந்த துறவிகள் இல்லையா? " என்றார்.

சிஷ்யர்களுக்கு துறவு பற்றிய புரிதல் ஆரம்பமானது...


________________________ஓம்_____________________________

துறவி என்பவன் அனைத்தையும் துறப்பவன் அல்ல.

பொறுப்புகளை பார்த்து ஓடுபவன் துறவியாக இருக்க முடியாது. உலகத்தில் உள்ள அனைத்துக்கும் நானே பொறுப்பு என நினைக்க வேண்டும்.

எனது எனது என கூறாமல் , உலகம் அனைத்தும் நமது நமது என கூறுபவன் துறவி.

காவி உடையும் , கமண்டலமும் ஒருவனை துறவியாக்க முடியாது , "நான்" என்ற அகத்தை துறந்தவனே துறவியாவான்.

Kuru

சுழற்சியில் மாட்டிய குருவும் சிஷ்யனும்


போன ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

அந்த ஜென்மத்தின் நினைவுகள் தெரியத்து வங்கியது.

அதில் அடுத்த ஜென்மத்தை காட்டுகிறேன் வா என என் நெற்றிப் பொட்டில் கை வைத்தார் குரு நாதர்.

இவ்வாறு நாங்கள் பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டோம்..!

-----------------ஓம்-----------------

எந்த சிஷ்யனிடமும் குரு தான் அதை செய்கிறேன் இதை செய்கிறேன் என கூறுவதில்லை.
அவ்வாறு கூறுபவர் அகந்தையின் சொரூபமாக தான் உயர்ந்தவன் என காட்டவே செய்கிறார்.

அவர் குரு நிலையில் இருக்க வாய்ப்பில்லை.

பல ஜென்மங்களை காட்டுகிறேன் என கூறுபவரை விட...

உனக்கு உன் இருப்பை மட்டுமே காட்டுகிறேன் என்ற விழிப்புணர்வை கொடுப்பவரை குருவாக இருக்க முடியும்.
-----------------ஓம்-----------------
இறைவன் அருவமானவன்.
இறைவன் குருவின் வாக்கினால் உருவமாகிறார்.

குருவே இறைவனை நமக்கு காட்டும் கண்களாக இருக்கிறார்.
அதில் தெரியும் காட்சிகள் என்றும் தெய்வீகமானது.

குரு கூறும் எவ்வாக்கியமும் மஹாவாக்கியமாகிவிடும்.

Tuesday, November 16, 2010

PATTINATHAR 1



சித்தர்கள்


இல்லற வாழ்க்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தின் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம். சித்தர்களுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது.


இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் சுத்தமான, வெள்ளையுடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி சிரித்துப் பழகி அன்னதானம் இடைவிடாது செய்து, பல பாடல்களை இயற்றி, கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வடலூர் ராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே!!!

சித்தர்களை வெளித்தோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்துவர்.

பொதுவாகவே நம்மூர்களில் காணப்படும் சாமியார்கள் என்பவர்கள் வேறு. கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் தன்னுடைய கையில் கடவுளைக் காட்டுவார். தான் கண்ட கோவில் கருவறைகளை ஒவ்வொன்றாக சொல்லி, எது வேண்டும் பார் என்பார். அவர் சொல்லாத கோவில்களைச் சொல்லி கேட்கக் கூடாது. கேட்டால் காட்டவும் முடியாது. இதுபோல போலி வித்தைக்காரர்கள் வேறு. சித்தர்கள் இத்தகைய மாயாஜால வித்தைகளை வெறுத்து ஒதுக்கியவர்கள். மக்களை தோஷம் என்று ஏமாற்றுவதும், பரிகாரம் என்று சொல்லிப் பணம் பறிப்பதும், முனிவர்கள் போல் வேஷமிட்டுத் திரிவதும் சித்தர்களின் செயல்கள் அல்ல.

இடைவிடாது பலகாலம் யோகமார்க்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்படியாக இலய யோகம் செய்து (இலயம் என்பது ஒன்றுபடுதல் ஆகும். இறைவனுடன் ஆன்மா ஒன்றுபடும் பயிற்சிகளில் ஈடுபடுவது இலயம் ஆகும்) அஷ்டமா சித்துக்களை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வதில்லை. நாம் செய்வதற்கு அரிய செயல்கள் என்று நினைப்பவற்றை சித்தர்கள் சர்வ சாதாரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களைக் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.
அஷ்டமாசித்துக்கள்::



பிராத்தி

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.

திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.

அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்
ஐந்து தொழில்களை நடத்துதல்
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.

திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.